நாய் கடிக்கு இலக்காகி மாணவன் பலி! யாழில் சம்பவம்
யாழ். வடமராட்சி பகுதியில் நாய் கடிக்கு இலக்கான மாணவர் நீர்வெறுப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், நாய் கடிக்கு இலக்கான மாணவரின் தாய் மற்றும் சகோதரி ஆகியோர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டிற்குள் நுழைந்த நாயொன்று சிறுவன், அவனது தாய் மற்றும் சகோதரியையும் கடித்துள்ளது. இதனையடுத்து, குறித்த அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், நாய் கடி காரணமாக சிறுவனுக்கு நீர்வெறுப்பு நோய் ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதேவேளை, கடித்ததாக கூறப்படும் நாயை கண்டுபிடிக்க பிரதேச மக்கள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.