அதிகாலையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞன்..! திக்குமுக்காடும் பொலிஸாா்..

ஆசிரியர் - Editor I
அதிகாலையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞன்..! திக்குமுக்காடும் பொலிஸாா்..

கொழும்பு- மஹரகம பகுதியில் 18 வயதான இளைஞன் ஒருவன் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக பொலிஸாா் கூறியுள்ளனா். 

பன்னிப்பிட்டிய தனியார் கல்வி நிறுவனத்திற்கு முன்னால் வைத்து. இன்று அதிகாலை 12.20 மணியளவில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் 18 வயதுடைய பன்னிப்பிட்டிய தெப்பானம, பொரளை வீதி பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

உயிரிழந்தவரின் சடலம் ஹோமாகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவத்திற்கான காரணம் இன்னமும் தெரியாத நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு