துப்பாக்கி முனையில் மீனவர்கள் விரட்டியடிப்பு!

ஆசிரியர் - Editor II
துப்பாக்கி முனையில் மீனவர்கள் விரட்டியடிப்பு!

கச்சத்தீவுக்கு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், படகுகளில் இருந்த வலைகள் மற்றும் மீன் பிடி உபகரணங்களை வெட்டி கடலில் வீசியுள்ளதாகவும் மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதன் காரணமாக மீனவர்கள் பாதியிலேயே கரைக்கு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் அண்மைய காலங்களில் அதிகரித்து வருவதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எனவே, குறித்த விடயம் தொடர்பில் மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.<

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு