யாழ்.பல்கலை சிங்கள மாணவர்கள் நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

ஆசிரியர் - Editor II
யாழ்.பல்கலை சிங்கள மாணவர்கள் நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மூன்றாம் வருட சிங்கள மாணவர்கள் நால்வரை, எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, யாழ் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நான்காம் வருட மாணவர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த மாணவர்களுக்கு பிணை வழங்குமாறு அவர்களது சார்பில் ஆஜரான சட்டத்தரணி வேண்டுகோள் விடுத்தார்.

எனினும், தாக்குதலுக்கு இலக்கான மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால், நீதவான் குறித்த கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
அண்மையில் திருநெல்வேலியின் பிரதான வீதிகளில் சிங்கள் மாணவர்கள் தமக்கிடையே மோதிக்கொண்ட சம்பவத்தினை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு