8 நாட்களாகியும் தகவல் இல்லை..! தேடுதல் முயற்சியும் தோல்வி. காத்திருக்கும் மக்கள்..

ஆசிரியர் - Editor I
8 நாட்களாகியும் தகவல் இல்லை..! தேடுதல் முயற்சியும் தோல்வி. காத்திருக்கும் மக்கள்..

அம்பாறை- மாளிகைக்காட்டு துறையயிலிருந்து ஆழ்கடல் மீன்பிடிக்காக கடந்த 18ம் திகதி சென் ற 3 மீனவா்கள் 8 நாட்களாகியும் கரை திரும்பாத நிலையில், தேடுதல் நடவடிக்கைகளும் தோல்வி யில் முடிந்திருப்பதாக உறவினா்கள் கண்ணீருடன் கூறுகின்றனா். 

சாய்ந்தமருதை சேர்ந்த சீனி முகம்மது ஜுனைதின் (வயது 36), இஸ்மா லெப்பை ஹரீஸ் (வயது 37 ), காரைதீவை சேர்ந்த சண்முகம் சிரிகிருஷ்ணன் (வயது 47) ஆகிய மீனவர்களே குறித்த படகில் பயணம் செய்துள்ளனர் இவர்கள் பற்றிய தகவல்களை பொலிஸ், 

கடற்படை ஆகியோருக்கு ஆரம்ப நாள்முதல் அறிவித்துள்ளதுடன் மீனவ சங்கங்களும் கடந்த ஆறு நாட்களாக கடலில் பல இலட்சம் ரூபாய்களை செலவழித்து தேடுதல் வேட்டையை ஆரம்பித்திருந்தும் தேடுதல் தோல்வியிலையே முடிந்துள்ளது.

இந்த மக்களுக்கு உதவுவதாக அரசியல்வாதிகள் பத்திரிக்கை அறிக்கைகள் விடுப்பதுடன் இந்த விடயம் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுடன் எவ்வித உதவியும் செய்ய முன்வரவில்லை என பிரதேச மீனவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். 

அத்துடன் மீனவ சங்கங்களின் அடுத்த கட்ட முயற்சியாக தலைநகருக்கு சென்று அங்குள்ள உயரதிகாரிகள் மற்றும் குறித்த இலாக்காவுக்கு பொறுப்பான அமைச்சருடனும் பேசி தேடுதலை விஸ்தரிக்க உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு