வடமாகாண நீதிமன்றங்கள் வெறிச்சோடின..! சட்டத்தரணிகள் பூரண பகிஸ்காிப்பு..

ஆசிரியர் - Editor I
வடமாகாண நீதிமன்றங்கள் வெறிச்சோடின..! சட்டத்தரணிகள் பூரண பகிஸ்காிப்பு..

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையாா் ஆலய வளாகத்தில் சட்டத்தரணி சுகாஸ் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதை கண்டித்தும், சட்டத்தை நடைமுறைப்படுத்த தவறிய பொலிஸாாின் செயற் பாட்டிற்கு கண்டனம் தொிவித்தும் இன்று சேவை புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. 

வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் உள்ள நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் தமது பணிக ளை புறக்கணித்துள்ளனா். இதனால் நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றது. 

இதேவேளை நீதிமன்ற கட்டளையை மீறியவா்கள் மீதும், அதனை தடுக்க தவறிய பொலிஸாா் மீதும் நடவடிக்கை எடுக்க தவறினால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டத்தரணிகள் எச்சாித்துள்ளனா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு