பல்வேறு கோரிக்கையினை முன்வைத்து ஆரம்பமானது நடைபயணம்!

ஆசிரியர் - Admin
பல்வேறு கோரிக்கையினை முன்வைத்து ஆரம்பமானது நடைபயணம்!

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு,சிங்கள குடியேற்றங்களை நிறுத்து , அரசியல் கைதிகளை விடுதலை செய், இனஅழிப்பு மற்றும் காணாமல் ஆக்கபட்டவர்களை கண்டறிய சர்வதேச விசாரணையை மேற்கோள் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய நடைபயணம் ஒன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியினால் இன்றயதினம் காலை முன்னெடுக்கப் பட்டிருந்தது.

வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியிலிருந்து ஆரம்பமாகிய  நடைபயணம், தியாகதீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியுடன் இணைந்து  யாழ்பாணத்தில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவு திடலை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக ஊர்தியில் அமைக்கபட்டிருந்த திலீபனின் திருவுருவ படத்திற்கு காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களால் மலர்மாலை அணிவிக்கபட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர்  செ,கயேந்திரன், மற்றும் சட்டதரணி சுகாஸ்,  உறுப்பினர்கள்,காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவளை நடைபயணம் வவுனியா மணிக்கூட்டுகோபுர சந்தியை தாண்டி பசார் வீதியை நெருங்கிய வேளை ஊர்வலத்தை தடுத்த பொலிசார் ஒலிபெருக்கி பாவனையை நிறுத்துமாறு உத்தரவிட்ட நிலையில் சற்று நேரம் குழப்பம் ஏற்பட்டிருந்தது.

 ஒலி பெருக்கி பாவனை இல்லாமல் பயணத்தை மேற்கொள்ளுமாறு பொலிசாரால் பணிக்கபட்டது.

அதன்பின்னர் புதிய பேருந்து நிலையம் வரைக்கும்  ஒலி பெருக்கி பாவனை இல்லாமல் நடைபயணம் தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு