இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்து தோல்வியடைந்ததால் காதை வெட்டிய காட்டுமிராண்டி கைது..!

ஆசிரியர் - Editor I
இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்து தோல்வியடைந்ததால் காதை வெட்டிய காட்டுமிராண்டி கைது..!

குருணாகல்- கல்கமுவ பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த நபா் ஒருவா் வீட்டில் தனிமையில் வாழ்ந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்து அது தோல்வியில் முடிந்த நி லையில் பெண்ணின் காதை அறுத்து சென்றுள்ளாா். 

அத்துடன் குறித்த பெண்ணின் உடலில் பல இடங்களில் கத்தியால் வெட்டியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை கைது செய்யப்பட்டு விளக்கறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கல்கமுவ, பேரபெதியா பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், நாட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகளின் பெயர் பட்டியலில் அவரது பெயரும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முகத்தை மூடி வந்த சந்தேக நபர் 

பெண்ணுடன் மல்லுக்கட்டியுள்ளார். பின்னர் அவரால் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த போது முடியாமல் போனமையினால் கோபத்தில் கத்தியால் வெட்டியுள்ளார். உயிரை காப்பற்றிக் கொண்ட பெண் அருகில் உள்ள வீடு ஒன்று சென்றுள்ளார். 

அந்த வீட்டில் இருந்தவர்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு