வடக்கின் பல பாகங்களில் இன்று செவ்வாய்க்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!
மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை(10) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்று காலை- 08.30 மணி முதல் மாலை- 05.00 மணி வரை மாகியப்பட்டி, பெருமாள் கடவை, சண்டிலிப்பாய் வைரவர் கோவிலடி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.