யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் இன்று திங்கட்கிழமை மின்தடை
மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் இன்று திங்கட்கிழமை (09) மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி இன்று காலை 08.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை யாழ்.குடாநாட்டின் உடுப்பிட்டி, தொண்டைமானாறு, வல்லை, பொக்கணை, மயிலியதனை, சிதம்பரா, அக்கரை, வளலாய், வத்திராயன், உடுத்துறை, ஆனைக்கோட்டை, மூத்தவிநாயகர் கோவிலடி, நவாலி, சென்பீற்றர்ஸ் தேவாலயம், வேலக்கை பிள்ளையார் கோவிலடி, அட்டகிரி, குளப்பிட்டி, வராகி பாடசாலை, சாவற்காடு, காக்கைதீவு , ஆழியவளை, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, முள்ளியான், கீவில், தாளையடி, தாளையடி தொழிற்சாலை, மருதங்கேணி, செம்பியன்பற்று, மாமுனை, குடாரப்பு ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.