யாழ்பாணத்திற்கு சுற்றுலா சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த பரிதாபம்
காரில் வந்தவர்களை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வழிமறித்து 7 லட்சம் ரூபா பெறுமதியான நகைகள், பணத்தை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் எழுதுமட்டுவாழில் நேற்று முன்தினம் மாலை நடந்துள்ளது.காத்தான்குடியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஒரு குடும்பம் காரில் சுற்றுலா வந்தது.
அவர்கள் ஏ-9 வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் காரின் முன்பாக வந்து வழிமறித்தனர்.
காரில் இருந்தவர்களை அச்சுறுத்தி பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எதிரிசிங்க தெரிவித்தார்.
துரிதமாகச் செயற்பட்ட பொலிஸார் இந்தக் கொள்ளையுடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இருவரை நேற்று முன்தினம் மாலை கைது செய்துள்ளனர்