சுமந்திரனின் “லண்டன்“ கனவில் மண்! – நடந்தது என்ன?

ஆசிரியர் - Editor II
சுமந்திரனின் “லண்டன்“ கனவில் மண்! – நடந்தது என்ன?

பணம் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர் தேசங்களில் மேற்கொள்கின்ற முயற்சிகள் தோல்வியடைந்துவருகின்ற நிலையில் மீண்டும் ஒரு முயற்சியில் ஈடுபட்ட சுமந்திரனுக்கு மீண்டும் ஏமாற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரியவந்திருக்கிறது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

தேர்தல் பிரச்சார வசூலுக்காக இலண்டன் பயணத்தை ஒழுங்கு செய்திருந்த த.தே.கூட்டமைப்பு இலண்டன் கிளை மண்டபங்களை ஒழுங்கு செய்ததோடு சுமந்திரனோடு இராப்போசனம் என்ற போர்வையில் குறைந்தது இலங்கை ரூபாய் பத்தாயிரம் என பற்றுச்சீட்டுக்களை விற்பனை செய்திருந்தது.

இருந்தும் இளைஞர்கள் சுமந்திரனை சந்திக்கும் நோக்குடன் காத்திருந்ததாகவும் அங்கிருந்து அறியக்கிடைக்கிறது.

முன்னதாகவே சுமந்திரனின் பிரித்தானிய விஜயத்தை கண்டித்து அங்குள்ள இளைஞர்கள் முகநூல் வாயிலாக பலத்த எதிர்ப்புக்களை தெரிவித்திருந்த நிலையில் சுமந்திரனின் நிதிசேகரிப்பும் இராப்போசன விருந்தும் கைவிடப்பட்டுள்ளதாக த.தே.கூட்டமைப்பின் பிரித்தானிய கிளை அறிவித்துள்ளது.

காரணம் எதிர்ப்பாக இருக்கின்றபோதும் அதனை சொல்லாது தற்போது பெரும்மோசடி குற்றம் சாட்டப்பட்டு நடைபெற்றுவரும் இலங்கை மத்தியவங்கி பிணைமுறி மோசடி அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்போது சுமந்திரன் அங்கு இருக்கவேண்டும் என்பதாலேயே நிகழ்வு இரத்து செய்வதாக கூட்டமைப்பின் லண்டன் கிளை அறிவித்தல் விடுத்துள்ளது.

ஏற்கனவே அவுஸ்திரேலியா, பிரித்தானியா உட்பட்ட நாடுகளுக்கு சென்ற சுமந்திரன் அங்கு ஏற்பட்ட பலத்த எதிர்ப்புக்களால் இடைநடுவில் நாடுதிரும்பிய சம்பவங்கள் பல இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு