யாழ். கடலில் மிதந்து வந்த மர்மபெட்டிக்குள் குண்டுகள்? -
யாழ்ப்பாணம் - மண்டைதீவு சந்திப் பகுதி கடலில் இருந்து மீட்கப்பட்ட மர்மப் பெட்டியில் குண்டுகள் சில காணப்பட்டதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரவித்துள்ளன.
பச்சை நிற மரத்தாலான பெட்டியொன்று மண்டைதீவு கடலில் மிதந்து வருவதை மீனவர்கள் சிலர் அவதானித்த நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இந்த தகவலின் அடிப்படையில் நேற்று மாலை 5 மணியளவில் குறித்த மரத்தாலான பெட்டி பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது.
மீட்கப்பட்ட பெட்டி தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டிருந்த நிலையில், பெட்டியை திறந்து பார்ப்பதற்கு பகுப்பாய்வு திணைக்களத்தின் உதவி கோரப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே தற்போது குறித்த பெட்டியில் குண்டுகள் சில காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.<