சந்திரிகாவை சீண்ட வேண்டாம்! மஹிந்த ராஜபக்ச எச்சரிக்கை

ஆசிரியர் - Admin
சந்திரிகாவை சீண்ட வேண்டாம்! மஹிந்த ராஜபக்ச எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தொடர்பாக கவனமாக இருக்க வேண்டும் என மஹிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சந்திரிக்கா இணைந்து செயற்படுவது எங்களுக்கு பாதகமான நிலையை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு மஹிந்த அறிவுறுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - பொதுஜன பெரமுனவுடன் இணைவது தொடர்பில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் சந்திரிக்கா சுதந்திர கட்சியின் பலமாக இருப்பது தங்களுக்கு ஆபத்தாக உள்ளது. சந்திரிக்காவுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு அவரை குழப்பி விட வேண்டாம் என மஹிந்த ஆலோசனை வழங்கியுள்ளார்.

தவறான நேரத்தில் அவர் அங்கு வந்து விட்டார். அந்த பெண்ணை ஒரு போதும் நம்ப முடியாது. எங்கள் மீது எப்படியும் கோபமாக தான் இருப்பார். எனவே அவதானமாக செயற்படுங்கள்.

இது மூளையுடன் செயற்பட வேண்டிய நேரம். பசிலும், சந்திரிக்கா குறித்து தேவையற்ற கருத்துக்களை வெளியிட்டிருந்தார். கருத்துக்கள் வெளியிட வேண்டாம். முடிந்தால் சந்திரிக்கா - மைத்திரியை பிரித்து விடுங்கள் என மஹிந்த ஆலோசனை வழங்கியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு