ஏழாக அதிகரிக்கும் யாழ்ப்பாணம் – கொழும்பு ரயில் சேவை!

ஆசிரியர் - Admin
ஏழாக அதிகரிக்கும் யாழ்ப்பாணம் – கொழும்பு ரயில் சேவை!

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையில் மேலதிகமாக ஒரு ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த ரயில் சேவை 5ம் திகதிக்கு பின்னர் இடம்பெறவுள்ளதாகவும் ரயில்வே திணைக்களத் தவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கொழும்பிலிருந்து மாலை 3.50 மணிக்கு வவுனியா நோக்கி புறப்படும் ரயில் சேவையே யாழ்ப்பாணம் வரை விஸ்தரிக்கப்படவுள்ளது. 

அதுபோல் காலை 5.45 மணிக்கு வவுனியாவில் இருந்து கொழும்புக்கு ரயில் சேவை இடம்பெறுகின்றது. இந்த சேவையை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரை நடத்தவும் திட்டமிடப்படுகின்றது.

மேற்படி இரு சேவைகளும் மக்களுக்கு பயன்படும் வகையில் நேரமாற்றங்கள் மேற்கொள்ளும் வேலைகள் முடிவடைந்ததும் புதிய சேவை ஆரம்பிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. 4003 மற்றும் 4004 ரயில்களே புதிய ரயில் சேவையில் இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்மூலம் தினமும் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் எதிர்வரும் 5ம் திகதிக்கு பின் ரயில் சேவை ஏழாக அதிகரிக்கப்படவிருக்கின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு