நவாலி கொள்ளையர்களுக்கு விளக்கமறியல்!

ஆசிரியர் - Admin
நவாலி கொள்ளையர்களுக்கு விளக்கமறியல்!

திருமண காணொலிப் பதிவை காண்பித்து, மணமகளின் தாலி உள்ளிட்ட 60 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்த சந்தேக நபர்கள் மூவரை, 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு, மல்லாகம் நீதிவான் நீதிமன்றம், நேற்று உத்தரவிட்டது.

நவாலி தெற்கு, கொத்துக்கட்டி வீதியில் உள்ள வீடொன்றுக்குள் ஓகஸ்ட் 29ஆம் திகதி அதிகாலை 1.30 மணியளவில், புகுந்த 5 பேர் கொண்ட கொள்ளைக் கும்பலொன்று, வீட்டில் இருந்த நபரொருவரைக் கட்டி வைத்து விட்டு, நடைபெற்ற திருமண நிகழ்வின் காணொலிப் பதிவை காண்பித்து, அதில் அணிந்திருந்த தங்க ஆபரணங்களை தருமாறு கத்தி முனையில் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியது.

அத்துடன், கும்பலின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாத நபர் ஒருவர் மீது வாளால் வெட்டி தாக்குதல் நடத்திய அக்கொள்ளைக் கும்பல், மணமகளின் தாலி உட்பட அங்கிருந்த பெண்கள் அணிந்திருந்த 60 பவுணுக்கும் மேற்பட்ட தங்க நகைகளும் அவ்வீட்டுக்கு வந்திருந்த வௌிநாட்டவர்களின் கடவுச் சீட்டுகளையும் கைப்பைகளையும் கொள்ளையடித்துச் சென்றது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டதை அடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், யாழ்ப்பாணத்தில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நாகேஸ்வரன் என்பவருடைய சகாக்களான சங்கானை, கட்டுடை, நவாலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவரை கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை, மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில், நேற்று ஆஜர்படுத்தப்பட்ட போதே, 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு