தமிழ் குடும்பத்தை இலங்கைக்கு நாடுகடத்த எதிர்ப்புத் தெரிவித்து அவுஸ்ரேலியா முழுவதும் போராட்டம்!

ஆசிரியர் - Admin
தமிழ் குடும்பத்தை இலங்கைக்கு நாடுகடத்த எதிர்ப்புத் தெரிவித்து அவுஸ்ரேலியா முழுவதும் போராட்டம்!

தமிழ் குடும்பத்தை இலங்கைக்கு நாடுகடத்த அவுஸ்ரேலிய அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆயிரக்கணக்கான மக்கள் இன்று அவுஸ்ரேலியா முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவுஸ்ரேலியாவில் உள்ள பல்வேறு நகரங்களிலும் நடந்த இந்தப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

அவுஸ்ரேலியாவில் பிறந்த 4 மற்றும் 2 வயதுடைய இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் கொண்ட புகலிடக் கோரிக்கையாளர்களை, இலங்கைக்கு அனுப்புவதற்காக விமானத்தில் ஏற்றி வலுக்கட்டாயமாக நாடுகடத்த அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. விமானம் புறப்பட்ட நிலையில் அவுஸ்ரேலிய நாட்டின் செயற்பாட்டாளர்கள் போராடி நாடுகடத்தலைத் தடுத்தனர்.

விமானம் புறப்பட்ட பிறகு நீதிபதி ஒருவர் தொலைபேசி மூலம் பிறப்பித்த உத்தரவால் நடேசலிங்கம், பிரியா என்ற தம்பதியினர் உட்பட இரண்டு பெண் குழந்தைகள் உள்ளடக்கிய மேற்படி குடும்பம் இலங்கைக்கு அனுப்பப்படுவது தடுக்கப்பட்டது. தற்போது குறித்த குடும்பத்தினர் அவுஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான வழக்கும் மெல்போர்ன் நீதிமன்றத்தினால் விசாரிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றது.

இந் நிலையில் அவர்கள் வாழ்ந்த குயின்ஸ் தீவிலிருந்து மேற்படி குடும்பத்தை நாடு கடத்துவதில் அரசாங்கம் கொடுமை செய்ததாக அவுஸ்ரேலியாவின் பசுமைக் கட்சியின் தலைவர் ரிச்சர்ட் டி நடேல் குற்றம் சாட்டியுள்ளதுடன், அவர்களுக்கு ஆதரவாக அவுஸ்ரேலியவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு இடங்களில் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு