மருத்துவமனைக்குள் புகுந்து அட்டகாசம், இளைஞன் மீது வாள்வெட்டு, தேடப்பட்ட இரு ரவுடிகள் சாவகச்சோியில் கைது..!

ஆசிரியர் - Editor I
மருத்துவமனைக்குள் புகுந்து அட்டகாசம், இளைஞன் மீது வாள்வெட்டு, தேடப்பட்ட இரு ரவுடிகள் சாவகச்சோியில் கைது..!

யாழ்.சாவகச்சோி பகுதியில் இளைஞா் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியதுடன், சாவகச்சோி மருத்துவமனை ஊழியா்ளை அச்சுறுத்திய ஆவா குழு ரவுடிகள் இருவா் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். 

சாவகச்சேரி பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ள இரவு விருந்தின் போது ஏற்ப்பட்ட வாக்குவாதத்தில் சந்தேகநபர்கள் அறிவாள் ஒன்றினால் நபர் ஒருவரை வெட்டியாதாக கூறப்பட்டுள்ளது.சம்பவத்தில் காயமடைந்த நபரை 

சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்த பொழுது சந்தேக நபர்கள் இருவரும் பலாத்காரமாக நோயாளர் அறைக்குள் நுழைய முட்ப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவேளை குறித்த சந்தேக நபர்களை தடுத்து நிறுத்திய வைத்தியசாலையின் தாதி மற்றும் ஏனைய ஊழியர்களை இவர்கள் அச்சுறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.இதன்பின்னர் காவல் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே 

இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு