யாழில் குழந்தை கொல்லப்படும்போது பெற்றோர் எங்கிருந்தனர்?

ஆசிரியர் - Editor II
யாழில் குழந்தை கொல்லப்படும்போது பெற்றோர் எங்கிருந்தனர்?

யாழில் இன்று காலை இடம்பெற்ற துயர சம்பவத்தில் உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் சம்பவ நேரத்தில் குழந்தையை அவரது பாட்டியினிடத்தில் விட்டுவிட்டு வைத்தியசாலைக்குச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கொலையாளி தனது தாயையும் வெட்டிவிட்டு தனது சகோதரனின் குழந்தையையும் கொன்றுள்ளார் என கொலையாளியின் தந்தை பொலிஸாரினிடத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், இதன்போது உயிரிழந்த குழந்தை தனது மழலை பேச்சால் அப்பகுதியில் இருக்கும் அனைவரிடத்திலும் தனி செல்வாக்கைப் பெற்றிருந்தாக அருகில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தின்போது, 3 வயதுடைய தனுசன் நிக்சையா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு