யாழில் சிறுமிக்கு நடந்த கொடுமை! குற்றவாளிக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த கடுமையான தீர்ப்பு

ஆசிரியர் - Editor II
யாழில் சிறுமிக்கு நடந்த கொடுமை! குற்றவாளிக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த கடுமையான தீர்ப்பு

யாழ். பருத்தித்துறையில் சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞனுக்கு 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 2 வருடங்கள் கடூழியச் சிறை தண்டனை விதித்து நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

குறித்த வழக்கு யாழ். மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குற்றவாளிக்கு 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 2 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 25,000 ரூபா அபராதமும், அபராதத்தை செலுத்தத்தவறின் மேலும் 3 மாதங்களுக்கு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு யாழ் பருத்தித்துறை பகுதியில் வீட்டில் இருந்த சிறுமையை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என ஒருவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து குறித்த வழக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ். மேல் நீதிமன்றுக்கு பாரப்படுத்தப்பட்டது.

இதன்போது குற்றத்தை ஒப்புக்கொண்ட நபருக்கு, சிறுமியை கடத்திச் சென்றமை மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் புரிந்தமைக்கு 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 2 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு