யாழ்ப்பாணத்தில் காணாமல்போனோர் பிராந்திய அலுவலகம்!

ஆசிரியர் - Admin
யாழ்ப்பாணத்தில் காணாமல்போனோர் பிராந்திய அலுவலகம்!

காணாமல்போனோர் அலுவலகத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகம் எதிர்வரும் 24 ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரியவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. இது காணாமல்போனோர் அலுவலகத்தின் மூன்றாவது பிராந்திய அலுவலகமாகும். ஏற்கனவே மாத்தறையிலும், மன்னாரிலும் பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில்,“ எமது அலுவலகத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகம் இலக்கம் 124, ஆடியபாதம் வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் எதிர்வரும் 24 ஆம் திகதி சபாநாயகர் கரூ ஜயசூரியவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. அத்தோடு தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் மனோகணேசனும் இந்நிகழ்வில் கலந்து கொள்வார்.

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் நிறுவப்பட்டமையின் மூலம் கடந்த நான்கு தசாப்த காலமாக பலர் காணாமல்போயுள்ளமை ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதுடன், அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பொறுப்புக் கூறுவதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என்பதும் உணரப்பட்டுள்ளது. அந்தவகையில் காணாமல்போனோரின் உறவினர்கள் எம்மை அணுகுவதை இலகுபடுத்தும் நோக்கிலேயே பிராந்திய அலுவலகங்களை அமைத்து வருகின்றோம் என்று கூறப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு