யாழில் தீவிரமாக களமிறங்கும் பொலிஸார்

ஆசிரியர் - Editor II
யாழில் தீவிரமாக களமிறங்கும் பொலிஸார்

கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டு சம்பவங்களின் காரணமாக பொலிஸார் சோதனை நவடிக்கைகளை தீவிரப்படுத்தவுள்ளனர்.

அந்த வகையில் யாழில் பொலிஸாரின் வீதிச் சோதனை நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் பொலிஸார் குறிப்பிடுகையில், சில மாதங்களுக்கு முன்னர் வாள்வெட்டுச் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்திருந்தன.

அதன்போது சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு பலர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து வாள்வெட்டு சம்பவங்களில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தன. இருந்த போதிலும் கடந்த சில நாட்களாக மீண்டும் வாள்வெட்டு சம்பவங்கள் தலை தூக்கியுள்ளன.

இதனால் கடந்த முறை மேற்கொள்ளப்பட்டது போல இம்முறையும் சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவுள்ளோம் என சுட்டிக்காட்டியுள்ளனர்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு