பெற்ற தாயையும், சகோதரனின் 3 வயது மகளையும் வெட்டி கொன்ற கொரூரன். நஞ்சருந்தி தானும் தற்கொலை.

ஆசிரியர் - Editor I
பெற்ற தாயையும், சகோதரனின் 3 வயது மகளையும் வெட்டி கொன்ற கொரூரன். நஞ்சருந்தி தானும் தற்கொலை.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியில் நபரொருவர் தனது தாய் மற்றும் சகோதரனின் பிள்ளை ஆகியோரை வெட்டியதில் சகோதரனின் பிள்ளை சம்ப இடத்திலேயே உயிரிழந்துள்ளது.

இச் சம்பவமானது இன்று காலை 10.30 மணியளவில் பத்திரகாளி கோவில் வீதி வண்ணார்பண்ணை வடமேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் அதே இடத்தை சேர்ந்த தனுசன் நிக்ஷயா என்ற மூன்று வயது சிறுமியே கொல்லப்படவராவர்.

இன்று காலை ஈஸ்வரன் என அழைக்கப்படும் நபர் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கே அவரது சகோதரனும் அவரது மனைவியும் மருத்துவமனைக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் இருந்த தனது தாய் மற்றும் சகோதரனின் பிள்ளை ஆகியோரை வெட்டி வீழ்த்தியுள்ளார்.

இதன்போது சம்ப இடத்திலேயே குறித்த குழந்தை உயிரிழக்க தாய் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அந் நபரும் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச் சம்பவத்தில் தகவலறிந்து அயல் வீட்டுக்கார்ர்கள் காயமடைந்த தாயை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் வெட்டிய ஈஸ்வரன் என்றழைக்கபடும் நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இக் கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சம்பவத்தல் கொல்ப்பட்ட சிறுமியின் தாய் கர்ப்பிணி என்பதும் குறிப்பிடதக்கதாகும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு