சீ.வி.விக்னேஸ்வரன் தலமையில் பிராந்திய வல்லரசுகளின் எடுபிடிகளை கொண்ட தமிழ் தலமை ஒன்றை உருவாக்க சதி..!

ஆசிரியர் - Admin
சீ.வி.விக்னேஸ்வரன் தலமையில் பிராந்திய வல்லரசுகளின் எடுபிடிகளை கொண்ட தமிழ் தலமை ஒன்றை உருவாக்க சதி..!

தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை பெற்றுக்கொடுக்கும் வழியில் செயற்படும் தமிழ் தலமைகள் வடகிழக்கில் உருவாகுவதை பிராந்திய வல்லரசுகள் தடுத்துவருகின்றன. அதனடிப்படையில் நமது கட்சி எதிா்காலத்தில் அழிக்கப்படலாம். என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவா் கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் கூறியுள்ளாா். 

தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கியுள்ள பிரத்தியேக செவ்வியிலேயே அவா இவ்வாறு கூறியுள்ளார். அதில் மேலும் கூறியிருப்பதாவது, கடந்த பத்து வருடங்களாக இந்தியா போன்ற வல்லரசு நாடுகள் தங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்கு முகவர்களாக பயன்படுத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஆதரவை இழந்து வருகின்றது.

என்பதை குறித்த வல்லரசுகள் உணர்ந்துள்ளன. எனவே தமிழ் மக்கள் மாற்றுத் தரப்பை உருவாக்க முனைகின்ற நிலையில் அந்த மாற்றுத் தரப்பும் தங்களுடைய முகவர்களாக இயங்கக் கூடிய தரப்பாக இருக்கும் வகையில், முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் அவர்களை ஒருங்கிணைக்க வல்லரசுகள் முயற்சிக்கின்றன.

எவ்வாறாயினும், தமிழ் தேசிய முன்னணியை பொறுத்த வரையில் அனைத்து தரப்புகளும் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மைகளையும் வழங்காமல் தமிழ் மக்களின் வாக்குகளை பெறமுடியாது. இனியும் தங்களுடைய தேவைகளுக்கு பயன்படுத்தி விட்டு வீசும் கருவேப்பிலைகளாக தமிழ் மக்களை பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு