மாணவன் தவறவிட்ட பேர்ஸை கண்டெடுத்து வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்!

ஆசிரியர் - Editor II
மாணவன் தவறவிட்ட பேர்ஸை கண்டெடுத்து வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்!

மாணவன் ஒருவரால் யாழ்.நகரில் தவறவிடப்பட்ட பணப்பையை (பேர்ஸ்) கண்டெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் அதனை உரியவாறு ஒப்படைத்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று(17) பிற்பகல் இடம்பெற்றது. கொக்குவிலைச் சேர்ந்த மாணவன் யாழ். நகருக்கு வந்து திரும்பிய போது தனது பணப்பையைத் தவறவிட்டுள்ளார்.

அந்தப் பணப்பை யாழ். இந்து ஆரம்பப் பாடசாலைக்கு முன்பாக வீதியில் கிடந்துள்ளது. அதனை யாழ். பொலிஸ் நிலைய போக்குவரத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கண்டெடுத்துள்ளார்.

அவர் அந்தப் பணப்பையில் குறிப்பிடப்பட்டிருந்த கைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டு மாணவனின் குடும்பத்தை யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்துள்ளார்.

மாணவனால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அந்தப் பணப்பை உரியவாறு மீள வழங்கப்பட்டது. இந்நிலையில் பணப்பைக்குள் மாணவனின் ஆவணங்கள், வங்கி அட்டைகள் மற்றும் 7 ஆயிரம் ரூபா பணம் என்பன இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு