இராணுவத்தினர் நிலைகொள்வதற்கு வாள்வெட்டு வன்முறை வழிவகுக்கும்

ஆசிரியர் - Editor II
இராணுவத்தினர் நிலைகொள்வதற்கு வாள்வெட்டு வன்முறை வழிவகுக்கும்

இராணுவத்தையும் சிறப்பு அதிரடிப் படையையும் வடக்கிலிருந்து வெளியேற்றவேண்டும் என மாகாண சபை வலியுறுத்தி வருகின்றது. எனினும் இளைஞர்களின் வாள்வெட்டுக்கள் உள்ளிட்ட வன்முறைகள் இருக்குமாயின் இராணுவம் எமது மண்ணில் நிலைகொள்ளும் நிலை ஏற்பட்டுவிடும் என்று, வடக்கு மாகாண மகளிர் விவகார மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அனந்தி சசிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பிலேயே மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் குறிப்பிட்ட அவர்,

"யாழ்ப்பாண இளைஞர்கள் வாள்வெட்டு உள்ளிட்ட வன்முறைகளின் பிரியர்கள் என வெளியில் பேசப்படுகின்றது. ஒரு சிலரால் முன்னெடுக்கப்படும் இந்த வன்முறைகளின் பின்னணியில் பொலிஸார் மெளனமாக உள்ளனர்" எனவும் குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு