வடக்குக் கடற்பரப்பில் பல கோடி பெறுமதியான தங்கம் சிக்கியது
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடத்த முற்பட்ட 5 கோடி ரூபா பெறுமதி வாய்ந்த தங்க பாளங்கள் மீட்கப்பட்டுள்ளன.
காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் குறித்த தங்க பாளங்கள் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது, அவற்றை கடத்தி செல்ல முற்பட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட தங்கப்பாளங்களின் நிறை 7 கிலோகிராம் என குறிப்பிடப்பட்டுள்ளது.<