ஊர்காவற்றுறை பருத்தியடைப்பில் கடற்படைக்கு காணி சுவீகரிப்பு.

ஆசிரியர் - Editor I
ஊர்காவற்றுறை பருத்தியடைப்பில் கடற்படைக்கு காணி சுவீகரிப்பு.

ஊர்காவற்றுறை பருததியடைப்பு பகுதியில் கடற்படையினரின் பாதுகாப்பு மற்றும் அவதானிப்பு மையம் அமைப்பதற்காக 20 பரப்பு தனியார் காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இக் காணி சுவீகரிப்பிற்கான முதற்கட்ட நடவடிக்கையாக குறித்த எதிர்வரும் 25 ஆம் திகதி வியாழக்கிழமை அக் காணிகளை நிள அளைவை செய்வதற்கும் நில அளவை திணக்களத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த காணியானது ஊர்காவற்றுறை ஜே.50 கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட பருத்தியடைப்பு பகுதியில் உள்ள தனிநபர் ஒருவருடைய 20 பரப்பு காணி கடற்படையினருடைய தேவைக்காக சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இக் சுவீகரிப்பு நடவடிக்கையின்படி குறித்த காணியை எதிர்வரும் 25 ஆம் திகதி நில அளவை செய்யப் போவதாக அக் காணியின் உரிமையாளருக்கு அரச நில அளவை திணைக்களத்தினால் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அக் கடிதத்தில் குறித்த காணியில் கடற்படையினருக்கான (காஞ்சடவா) பாதுகாப்பு மற்றும் அவதானிப்பு அமையம் அமைப்பதற்காகவே சுவீகரிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் குறித்த காணி சுவீகரிப்புக்கு அக் காணி உரிமையாளரினால் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு