எட்டு வருடங்கள் கடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் போர்க்கருவி -

ஆசிரியர் - Editor II
எட்டு வருடங்கள் கடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் போர்க்கருவி -

விடுதலைப் புலிகள் இறுதி யுத்தத்தின் போது பயன்படுத்திய போர்க்கருவி ஒன்று ஆனந்தபுர பகுதியில் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது ஆனந்தபுரப்பகுதியை முற்றுகையிட்ட இராணுவத்தினர் அவ்விடத்தில் பாரிய தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தளபதிகள் இந்த பாரிய இராணுவத்தாக்குதலுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இராணுவப்படையினரின் நகர்வை இலக்குவைத்து தாக்கி அழிப்பதற்கு இந்த போர்க்கருவியை விடுதலைப் புலிகள் பயன்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று போர் முடிவடைந்து எட்டு வருடங்கள் கடந்த நிலையிலும் ஆனாந்தபுரத்தில் போர்த்தடயங்கள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு