ஆரம்பமாகியது தமிழ் மக்கள் பேரவையின் கருத்தமர்வும் கலந்துரையாடலும்
தமிழ் மக்கள் பேரவையின் “இடைக்கால அறிக்கை - மாயைகளை கட்டுடைத்தல்" என்னும் தலைப்பில் கருத்தமர்வும் கலந்துரையாடலும் தற்போது நடைபெறுகின்றது.
குறித்த நிகழ்வு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.
இதில் வடமாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சீ.வி.விக்னேஷ்வரன் தலைமை உரை ஆற்றுகிறார்.
தொடர்ந்து “வடகிழக்கு தமிழர் தம் உரிமைகளின் கேடயமாக சர்வதேச சட்டம்" எனும் தலைப்பில் பேராசிரியர் முத்துகுமாரசாமி சொர்ணராஜா உரையாற்றவுள்ளார்.
தொடர்ந்து "இடைக்கால அறிக்கை மாயைகளை கட்டுடைத்தல்" என்னும் தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.<