தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! இந்தியா- தமிழகத்திற்கு கப்பலில் செல்லலாம். மிகவிரைவில்..

ஆசிரியர் - Editor I
தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! இந்தியா- தமிழகத்திற்கு கப்பலில் செல்லலாம். மிகவிரைவில்..

யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை மற்றும் கொழும்பு துறைமுகங்களில் இருந்து இந்தியா- தமிழகத்திற்கு இரு பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக துறைமுக அதிகாரசபை தலைவா் கவன் ரத்நாயக்க கூறியுள்ளாா். 

காங்­கே­சன்­துறை மற்றும் காரைக் கால் துறை­ மு­கங்­களை இணைக்­கும் வகை­யி­லும், அது­ போன்று கொழும்பு- –தூத்­துக்­குடி துறை மு­கங்­களை இணைக்­கும் வகை­யி­லும், இரண்டு பய­ணி­ கள் கப்­பல் சேவை­களை ஆரம்­பிப்­ப­தன் மூலம், 

இரு­த­ரப்பு வணிகச் செயற்­பா­டு­கள் மற்­றும் சுற்­றுலா வாய்ப்­பு­களை அதி­க­ரிக்க முடி­யும். பய­ணி­ கள் கப்­பல் சேவை­யின் மூலம், சுற்­று­லாத் துறைக்­கும், சிறிய அள­வி­லான வணி­கத்­துக்­கும் அடிப்­ படை வச­தி­களை ஏற்­ப­டுத்­திக் கொடுக்க முடி­யும்.

தென்­னி­லங்­கை­யில் இருந்து இந்­தி­யா­வுக்­குப் பய­ணிக்­கும் பௌத்த சுற்­று­லாப் பய­ணி­க­ளுக்கும் இது சாத­க­மாக இருக்­கும். காங்­கே­சன்­துறை துறை­மு­கத்­துக்கு அரு­கா­மை­யில் வாழும் சமூ­கங்­க­ ளுக்கு வணிக வாய்ப்­பு­கள் அதி­க­ரிக்­கும்.

அத்­து­டன், சீமெந்து போன்ற பொருள்­களை மொத்தமாக நெடுஞ்­சாலை மற்­றும் தொட­ருந்து மூலம் கொண்டு செல்­வ­தற்­கான போக்­கு­வ­ரத்துச் செல­வைக் குறைக்க முடியும்’’ என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

2011இல், தூத்­துக்­குடி– கொழும்பு இடை­யில் பய­ணி­கள் கப்­பல் சேவை ஆரம்­பிக்­கப்­பட்­டது. எனி­ னும், வணிக ரீதி­யாக வெற்­றி­ய­ளிக்­கா­த­தால், இந்தக் கப்­பல் சேவையை நடத்­திய தனி­யார் நிறு­ வ­னம், அதனை நிறுத்­தி­யது.

தற்­போது, அரசு காங்­கே­சன்­துறை துறை­மு­கத்தை தர­மு­யர்த்தி வரு­கி­றது. இதற்­காக, இந்­தி­யா­ வின் எக்­சிம் வங்­கி­யி­டம் இருந்து 45.27 மில்­லி­யன் டொலர் பெறப்­பட்­டுள்­ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு