தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு

ஆசிரியர் - Editor I
தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு

தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று காலை வெளியீடு செய்யப்பட்டது. இன்று காலை 10.30 மணி க்கு யாழ்.வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் வடகிழக்கு மாகா ண முதலமைச்சர் வரதராஐ பெருமாள் மற் றும் தமிழர் சமூக ஐனநாயக கட்சியின் த லைவர் சிறீதரன் ஆகியோர் கலந்து கொ ண்டனர்.

இந்நிகழ்வில் வரதராஐ பெருமாள் உரை யாற்றுகையில், தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து சுரேஷ் பிறேமச்சந்திரன் விலகி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்து டன் இணையவுள்ளார். மறுபக்கம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கடந்த 2 வருடங்க ளில் மக்கள் மத்தியில் செல்வாக்குள்ளவர்களாக மாறிவிட்டார். இதனால் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு உண்டான நடுக்க நிலையை போக்கவே கூட்டமைப்பு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.

தமிழ்தேசிய கூட்டமைப்பு அரசுக்கு பின்னால் வால் பிடிப்பதால் தமிழ் மக்கள் கேட்கும் அதிகார பகிர்வு கிடைக்கப்போவதில்லை. அதிகார பகிர்வுக்காக போராடவேண்டும். ஆனால் அந்த எண்ணம் அல்லது ஆற்றல் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு இல்லை. பதவிகளையும், வாகனங்களையும் பெறுவதே தமிழ் மக் களுக்கான உரிமைகள் என கூறும் கூட்டமைப்பு தமிழ் மக்களின் உரிமைகளை உதாசீனம் செய்கிறது. என கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு