யாழ் பல்கலையின் முதலாம் இரண்டாம் வருட மாணவர்கள் வகுப்பு பகிஸ்கரிப்பு!
யாழ் பல்கலை கலைப்பீட 4 ஆம், 3 ஆம் ஆண்டு மாணவர்களை கற்றல் செயற்பாட்டுக்கு அனுமதிக்கும் வரை முதலாம் இரண்டாம் வருட மாணவர்கள் இன்று(16) முதல் வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனா்.
யாழ்ப்பாண பல்கலையில் கலைப்பீட 4 ஆம் 3 ஆம் வருட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக நான்கு பேர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதனால் 4 ஆம் 3 ம் வருட மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டது.
இதை கண்டித்து அவர்களை கற்றல் செயற்பாடுகளுக்குள் உள்வாங்க கோரி முதலாம் இரண்டாம் வருட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.