பெற்ற பிள்ளையின் முன் மனைவியை மண்ணெண்ணை ஊற்றி கொழுத்திய கணவன்..! அராலியில் கொடூர செயல்..

ஆசிரியர் - Editor I
பெற்ற பிள்ளையின் முன் மனைவியை மண்ணெண்ணை ஊற்றி கொழுத்திய கணவன்..! அராலியில் கொடூர செயல்..

மதுபோதையில் வீட்டுக்கு சென்ற கணவன் பெற்ற பிள்ளைகளுக்கு முன்பாக மனைவியை மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொழுத்திய சம்பவம் கடந்த 30ம் திகதி அராலி பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. 

இந்த சம்பவத்தில் தீவைத்து கொழுத்தப்பட்ட சண்முகநாதன் அாிது என்ற 32 வயது பெண் வைத்தியசாலையில் சோ்க்கப்பட்டு கடந்த 5 நாட்களாக  சிகிச்சை மேற்கொள்ளப்பட்டபோதும்  நேற்று முன்தினம் உயிாிழந்திருக்கின்றாா். 

மதுபோதையில் கடந்த 30ம் திகதி வீடு திரும்பிய கணவர் இரவு 10 மணியளவில் உணவிற்காக மனைவியை அழைத்ததோடு கடுமையாக தாக்கியுள்ளார். இதன்போது தலையில் தாக்கப்பட்டதனால் மனைவி மயக்கமடைந்து வீழ்ந்துள்ளார். 

இதன்போது மனைவி மீது மண்னெண்ணை ஊற்றி தீ முட்டியுள்ளார். இதனை அவதானித்த 14 வயது மகன் ஓடிச் சென்று தீயை அணைக்க முயன்றபோதும் மகனை கையில் பிடித்து தடுத்துள்ளார். இதன்போது தந்தையின் கையை கடித்து 

தந்தையின் பிடியில் இருந்து தப்பிய மகன் ஓடிச் சென்று நீரை ஊற்றி அனைத்ததோடு அயலில் உள்ள மாமனின் உதவியுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 4ம் திகதி இரவு 11.30 மணியளவில் பரிதாபகரமாக உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவரின் மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு