வட மாகாணத்தை திட்டமிட்ட வகையில் புறந்தள்ளியுள்ளது அரசு!

ஆசிரியர் - Editor II
வட மாகாணத்தை திட்டமிட்ட வகையில் புறந்தள்ளியுள்ளது அரசு!

வட மாகாணத்தை திட்டமிட்ட வகையில் புறந்தள்ளி வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்தோடு தொழில் வாய்ப்பில்லாத இளைஞர்கள் அரசாங்க தொழிலினை மட்டுமே எதிர்ப்பார்க்காமல் தனியார் அல்லது சுய தொழில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மன்னார் பாலத்திற்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கைவிணைப்பொருட்களும் பணை சார்ந்த உற்பத்தி பொருட்களும் உற்பத்தி செய்யும் இடத்தின் திறப்பு விழா நேற்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய வட மாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் நல்லாட்சி அரசாங்கம் வரவு செலவு திட்டத்தில் நயவஞ்சகமாக செயற்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில் வட மாகாணத்தில் தொழில் வாய்ப்பில்லாத இளைஞர்கள் சுயதொழில்களில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு