புத்துாரில் பாரிய பட்டம் ஒன்று இளைஞனைத் துாக்கிச் சென்றதால் பரபரப்பு
தைப்பொங்கலை முன்னிட்டு யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி புத்தூர் சந்திக்கு அண்மையில் பட்டம் ஏற்றிய இளைஞர் ஒருவர் 20 அடி உயரத்திற்கு இழுத்துசென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்றைய தினம் 30 அடி பட்டத்தினை சில இளைஞர்கள் கட்டி அதனை ஏற்றினர்.
இதன்போது பட்டம் எற்றியவர் 20 அடி உயரத்திற்கு இழுத்துசென்றது. பின்னர் இதன்போது பட்டத்தின் நூலின் கையை விட்டமையால் கீழே விழுந்து காயமடைந்துள்ளார்.
இவரை மற்றைய இளைஞர்கள் துக்கிசென்று யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்