யாழ் பருத்தித்துறையில் கைத்தொலைபேசி களவாடியவர்கள் கைது!

ஆசிரியர் - Editor II
யாழ் பருத்தித்துறையில் கைத்தொலைபேசி களவாடியவர்கள் கைது!

யாழ் பருத்தித்துறையில் களவாப்பட்ட 15 கைத்தொலைபேசிகளுடன் இருவர் நேற்று(16) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் பருத்தித்துறையில் தொலைபேசி கடை ஒன்றை உடைத்து பல பெறுமதியான கைத்தொலைபேசிகள் திருடப்பட்டதாக பருத்தித்துறை பொலீசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து பருத்தித்துறை பொலீசார் மற்றும் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலீசாரால் குறித்த விடயம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்றநிலையில் நேற்றையதினம் களவாடப்பட்ட கைத்தொலைபேசி ஒன்றுடன் பருத்தித்துறையை சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் இன்னுமொருவர் பருத்துறையில் கைது செய்ய்பட்டார்.

இருவரிடமிருந்தும் களவாடப்பட்ட 9 இலட்சம் ரூபா பெறுமதியான 15 போன்கள் பருத்தித்துறை பொலீசாரால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இருவரும் பருத்தித்துறையை வதிவிடமாக கொண்ட 21, மற்றும் 23 வயதை உடையவர்களாவர்.

கைது செய்யப்பட்டவர்கள் இன்றையதினம்(17) பருத்தித்துறை நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்படவுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு