தமிழ்மக்கள் பேரவையின் கருத்தமர்வு திடீர் இடமாற்றம்

ஆசிரியர் - Admin
தமிழ்மக்கள் பேரவையின் கருத்தமர்வு திடீர் இடமாற்றம்

தமிழ்மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(16) மாலை-04 மணிக்கு யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவிருந்த கருத்தமர்வும் கலந்துரையாடலும் நிகழ்வானது யாழ். வீரசிங்கம் மண்டபத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. 

தேர்தல் காரணங்களால் குறித்த  கலையரங்கைப் பயன்படுத்துவதற்கான அனுமதி இரத்துச் செய்யப்பட்டுள்ளமையால் யாழ். வீரசிங்கம் மண்டபத்திற்கு  இடம் மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி கருத்தமர்வும் கலந்துரையாடலும் இடம் மாற்றப்பட்டுள்ளமையைத் தமிழ்மக்கள் பேரவையும் சற்று முன்னர் உறுதிப்படுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.  

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு