மோட்டார்ச் சைக்கிள் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து: இளைஞன் படுகாயம்

ஆசிரியர் - Admin
மோட்டார்ச் சைக்கிள் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து: இளைஞன் படுகாயம்

பருத்தித்துறையிலிருந்து  யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த மோட்டார்ச் சைக்கிள் முச்சக்கர வண்டியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞனொருவர் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சமபவம் இன்று(13) பகல் இடம்பெற்றுள்ளது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை சமிக்ஞை போடாது திடீரெனத் திருப்ப முற்பட்ட போது பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்தச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த புத்தூர் கலைமகள் பகுதியைச் சேர்ந்த செல்வக்கண்டு ரூபன் (வயது-23) என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் அச்சுவேலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு