நிரந்தர நியமனம் தாருங்கள்.

ஆசிரியர் - Editor I
நிரந்தர நியமனம் தாருங்கள்.

127 ஆண் சுகாதாரப்பணி உதவியாளர்கள் நிரந்தர நியமனம் தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்திற்கு முன்னால் இன்று முதல் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த வருடம் 1:07:2016 தொடக்கம் 31:03:2017 வரை ஒன்பது மாத காலம் ஒப்பந்த அடிப்படையில் வடமாகாணத்தில் 127 ஆண்கள் சுகாதார பணியாளர்களாக உள்வாங்கப்பட்டனர்.

இவர்களது காலம் முடிவடைந்த பின்னரும் தொடச்சியாக ஆறு மாதகாலம் நிரந்த நியமனம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் எந்தவித கொடுப்பனவுகளும் இன்றி கடமையாற்றிவந்துள்ளனர். 

இவர்களுடைய எதிர்பாப்புகள் நிறைவேற்றாத காரணத்தினால் இன்றைய தினம் காலை 9:00 மணிமுதல் வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்திற்கு முன்னால் தொடச்சியான போராட்டத்தினை முன்னேடுத்துள்ளனர்.

இவர்கள் இணையதளத்திக்கு கருத்து தெரிவிக்கையில் நிரந்தர நியமனம் வழங்காவிடின் வடக்கு மாகாணத்திற்கு முன்னால் தற்கொலை செய்வேம் என சுகாதாரப்பணி ஊழியர்கள் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு