மது பாவனைக்கான தடைகளை மெல்ல தளர்த்தும் நல்லாட்சி அரசு.

ஆசிரியர் - Editor I
மது பாவனைக்கான தடைகளை மெல்ல தளர்த்தும் நல்லாட்சி அரசு.

இலங்கையில் மதுபானம் விற்பனை செய் யவும், கொள்வனவு செய்யவும் பெண்களு க்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள் ளதுடன் மதுபான நிலையங்கள் திறந்திரு க்கும் நேரத்திலும் மாற்றம் கொண்டுவரப் பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சினால் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி மது பான நிலையங்களிலும், மதுபான உற்பத் தி மையங்களிலும் பெண்களை வேலைக் கு அமர்த்துதல் மற்றும் மதுபானம் கொள் வனவு செய்தல் போன்றவற்றுக்கு பெண் களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்ப ட்டுள்ளது.

மேலும் மதுபான விற்பனை நிலையங்கள் திறந்திருக்கும் நேரங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 

இதற்கமைய சில்லறை மதுபான  விற்பனை நிலையங்கள் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரையும். கள்ளு தவறணை காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும், ஓய்வு விடுதிகளிலுள்ள மதுபான நிலையங்களில் முற்பகல் 11 மணி முதல் இரவு 11 மணிவரையும், களியாட்ட விடுதிகளில் முற்பகல் 11 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்கப்படவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு