வடக்கில் வீடில்லா பிரச்சினைக்கு தீர்வு!
வடக்கில் நிலவும் வீடில்லா பிரச்சினைக்கு தீர்வு காணப்பதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தவுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் லக்விஜய சாகல பலன்சூரிய தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வடக்கில் 125 வீடமைப்புத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மூவாயிரம் மில்லின் ரூபா நிதி முதலீடு செய்யப்படவுள்ளதாகவும் அதிகாரசபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.