யாழ் - கொக்குவில் தொழிநுட்பக்கல்லூரி மாணவ குழுக்களிடையே மோதல் : 4 பேர் படுகாயம்!

ஆசிரியர் - Editor II
யாழ் - கொக்குவில் தொழிநுட்பக்கல்லூரி மாணவ குழுக்களிடையே மோதல் : 4 பேர் படுகாயம்!

யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில்நுட்ப கல்லூரி மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 4 பேர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

நேற்றையதினம் கல்லூரி வளாகத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றது.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது....

தொழிநுட்பக்கல்லூரியில் நேற்றைய தினம் செவ்வாய் கிழமை (14-11-2017) பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வு முடிவடைந்து மாணவர்கள் வெளியில் வந்த வேளை இரு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

குறித்த மோதலில் மாணவன் ஒருவரை பிறிதொரு கற்கை நெறி மாணவன் தலைகவசத்தினால் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து இரண்டு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலை தடுத்து தாக்கிய மாணவனை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் சிறிது நேரத்தில் அந்த மாணவன் மேலும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட தனது கற்கை நெறி மாணவர்களை அழைத்து வந்து மற்றைய கற்கை நெறி மாணவர்கள் மீது தலைக்கவசம் தடிகள் கம்பிகள் உள்ளிட்டவைகளால் தாக்குதல்களை மேற்கொண்டனர்.

இதனையடுத்து அங்கு வந்த விரிவுரையாளர்கள் மற்றும் ஏனைய மாணவர்கள் தாக்கிய மாணவர்களை மேலும் தாக்காது தடுத்தனர்.

எனினும் தாக்கியவர்கள் நீங்கள் வெளியில் வாருங்கள் வெட்டுறோம் என மிரட்டி தொழிநுட்பக் கல்லூரி வளாகத்தினை விட்டு வெளியேறினார்கள் என பாதிக்கப்பட்ட மாணவன் ஒருவன் தெரிவித்தார்.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் துஷாந் எனும் மாணவன் தலைக்கவசத்தால் மிக மோசமாக தக்கப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார்.அத்துடன் மேலும் 10 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மாணவர்களில் 4 பேர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை (15-11-2017) தமக்கு பரீட்சை முன்னோடி விரிவுரைகள் நடைபெற உள்ளதாகவும், அதற்கு செல்வதற்கு தமது கற்கை நெறி மாணவர்கள் பயந்துடன் காணப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட மாணவன் ஒருவன் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு