​யாழில் அரச அலுவலர்களின் மோசடிகள் அமபலம் !!

ஆசிரியர் - Editor II
​யாழில் அரச அலுவலர்களின் மோசடிகள் அமபலம் !!

யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 8 பேர் திணைக்கள மட்ட ஒழுக்காற்று நடவடிக்கையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பலருக்கு எதிராக சமுர்த்தி திணைக்களத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் அது குறித்த விசாரணைகள் இடம் பெற்று வந்தன.

இந்த விசாரணைகளின்போது பண மோசடியில் ஈடுபட்ட 5 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிர்வாகரீதியான குற்றப் பத்திரம் வழங்கியுள்ளனர்.

சண்லிப்பாய் பிரதேசசெயலகத்துக்கு உட்பட்ட மூன்று உத்தியோகத்தர்களும் கரவெட்ட –சாவகச்சேரி பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட தலா ஒவ்வொரு உத்தியோகத்தர்களுக்கும் இவ்வாறு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது.

அத்துடன் 3 சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு எதிராக பண மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கோப்பாய்-தெல்லிப்பளை மற்றும் ஊர்காவற்துறை ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட தலா ஒரு சமுர்த்தி உத்தியோகத்தர்மீது இவ்வாறு குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு திணைக்கள ரீதியான கணக்காய்வுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு விசாரணைகளில் உள்ளவர்களில் மூவர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மண்டைதீவில் சிறுமி ஒருவரிடம் தவறாக நடக்க முற்பட்ட வேலணை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தருக்கு எதிராக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு