போதை பொருளை கட்டப்படுத்த பொலிஸ், கடற்படை உதவியை நாடவேண்டும்.

ஆசிரியர் - Editor I
போதை பொருளை கட்டப்படுத்த பொலிஸ், கடற்படை உதவியை நாடவேண்டும்.

யாழ்.மாவட்டத்தில் போதை பொருள் அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த மு தலமைச்சர் பொலிஸார் மற்றும் கடற்படையின் உதவியை நாடவேண்டும் என வடமாகா ணசபை உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

வடமாகாணசபையின் 115வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இந்த அமர்வில் மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் யாழ்.மாவ ட்டத்தில் போதை பொருள் பாவனை

அதிகரித்திருக்கும் நிலையில் அதனை கட்டுப்படுத்தவேண்டும் என கோரும் விசேட கவன யீர்ப்பு விடயம் ஒன்றை சபைக்கு கொண்டுவந்தார். அந்த கவனயீர்ப்பு விடயத்தின் மீது க ருத்து தெரிவிக்கும்போதே உறுப்பினர்கள் மேற்படி கோரிக்கையினை முன்வைத்துள்ளனர். 

இதன்போது உறுப்பினர் அயூப் அ ஸ்மின் கருத்து கூறுகையில், யாழ்.மாவட்டத்தில் அண்மைக்காலமாக போதை பொருள் பாவனை அதிகரித்திருக்கின்றது. ஆ

னால் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்து வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என கூறினார். தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் உரைய ற்றுகையில், பாடசாலைகளை இலக்கு வைத்து போதை பொருள் பாவனை பரப்பபடுகின்றது. எனவே முதலமைச்சர்; விசேட பொலிஸ் குழுவை நியமித்து போதை பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றார். தொடர்ந்

து மாகாணசபை உறுப்பினர் இ.ஜெயசேகரம் உரை யாற்றுகையில், முதலமைச்சர் பொலிஸார், கடற்படையினர் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களை இணைத்த வ கையில் விசேட கூட்டம் ஒன்றை ஒழு

ங்கமைத்து போதை பொருள் கட்டுப்பாட்டு நடவடி க்கைகளை எடுக்கவேண்டும் என் றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு