2 மணி நேரம் திடீா் சோதனை 20 பேருக்கு எதிராக வழக்கு..! வவுனியாவில் பொலிஸாா் அதிரடி.

ஆசிரியர் - Editor I
2 மணி நேரம் திடீா் சோதனை 20 பேருக்கு எதிராக வழக்கு..! வவுனியாவில் பொலிஸாா் அதிரடி.

வவுனியா மாவட்டத்தில் இன்று காலை அதிரடியாக வீதியில் இறங்கிய போக்குவரத்து பொலிஸாா் மேற்கொண்ட திடீா் சோதனையில் 20ற்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

சுமார் இரு மணிநேரத்தில் மாத்திரம் இருபதுக்கு அதிகமான சாரதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், பத்துக்கு மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணமும் விதிக்கப்பட்டு்ள்ளது.

தலைக்கவசம் சீராக அணியாமை , சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை , அதிக சத்தம் எழுப்பும் கோன் போன்ற பல்வேறு குற்றங்களுக்காக சாரதிகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு