தயா மாஸ்டர் மீது தாக்குதல் மேற்கொண்டமைக்கான காரணம் வெளியானது

ஆசிரியர் - Editor II
தயா மாஸ்டர் மீது தாக்குதல் மேற்கொண்டமைக்கான காரணம் வெளியானது

விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டர் மீது நேற்றைய தினம் தாக்குதல் மேற்கொண்டமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

வீடொன்றில் தொலைக்காட்சி கேபிள் துண்டிக்கப்பட்டமையினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்ற தொடர்பாடல் பிரச்சினை காரணமாக பெரும்பான்மை கேபிள் தொடர்புகள் துண்டுடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

தயா மாஸ்டர் இயக்குனராக செயற்படும் தொலைகாட்சியிலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் குடிபோதையில் இருந்த சந்தேக நபர் ஆத்திரமடைந்து இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பணம் செலுத்தாமையினால் அந்த தமிழ் தொலைகாட்சி சேவையின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த நபர் கோபமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த மேசஸ் சற்குணதாஸ் என்ற 52 வயதுடைய நபர் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தயா மாஸ்டருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம் யாழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு