வடக்கு மாகாணத்தில் இயற்கையில் ஏற்படவுள்ள மாற்றம்
தற்போது காணப்படுகின்ற வறட்சியான வானிலையில் ஓரளவான மாற்றம் இன்று முதல் குறிப்பாக வட மாகாணத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், வட மாகாணத்திலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சில இடங்களில் (75 மி.மீ) ஓரளவு கன மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.