தாமதப்படுத்தப்பட்ட விடயங்களை இந்த ஆண்டிலாவது நடைமுறைப்படுத்த வேண்டும்!

ஆசிரியர் - Admin
தாமதப்படுத்தப்பட்ட விடயங்களை இந்த ஆண்டிலாவது நடைமுறைப்படுத்த வேண்டும்!

வடமாகாண முதலமைச்சர் நிதியம் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் மாற்றம் ஆகிய விடயங்களில் துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கையினை வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் வடமாகாண ஆளுநர் ரெஜினோலட் குரேயிடம் முன்வைத்ததுடன் இந்த வருடத்திலாவது தமிழ் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.    

நல்லாட்சி அரசாங்கத்தின் 3 வருட நிறைவினை கொண்டாடும் நிகழ்வு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சையில் தேசிய மற்றும் மாவட்ட ரீதியில் வடக்கு மாகாணத்தில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களைக் கௌரவித்து பதக்கங்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.

வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அமைச்சர்களான அனந்தி சசிதரன், சிவநேசன்,குணசீலன், சர்வேஸ்வரன் உட்பட மாகண சபை உறுப்பினர்கள் அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் வடமாகாணசபையின் 5 வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில் கடந்த வருடங்களில் தாமதப்படுத்தப்பட்ட விடயங்களை இந்த ஆண்டிலாவது நடைமுறைப்படுத்த வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு