கோத்தாவுக்கு ஆப்பு; ஷிராந்தி ராஜபக்ஷவே ஜனாதிபதி வேட்பாளர்!

ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ நிறுத்தப்பட்டால், மஹிந்தவின் அரசியல் முடிவுக்கு வந்து விடும் என்றும், எனவே ஷிராந்தி ராஜபக்ஷவே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்றும், மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
' கோத்தா அரசியலுக்குள் வந்தால் மஹிந்தவின் அரசியலில் தளம்பல் ஏற்பட்டு அதன் பின்னர் அரசியல் கேந்திர நிலையமாக கோத்தாபய ராஜபக்ஷ மாறிவிடுவார், இதனால்தான் மஹிந்த ராஜபக்ஷ, கோத்தாவை ஒரு சமயம் தூக்கி வைத்திருக்கிறார். அதன் பின்னர் கீழே எறிகின்றார் .
எனவேதான் மஹிந்த ராஜபக்ஷ, கோத்தாவை வேட்பாளராக நிறுத்த போவதில்லை. அவரது மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. கோத்தாவை வேட்பாளராக நிறுத்த எவரெவர் முயற்சிகளை மேற்கொண்டாலும் ஷிராந்தி ராஜபக்ஷஷவே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்றும் கூறினார்.